திடீரென பெட்ரோல் பங்கில் இருந்து மாயமான 50000 பணம் - சிசிடிவி வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


திடீரென பெட்ரோல் பங்கில் இருந்து மாயமான 50000 பணம் - சிசிடிவி வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் இருந்துக் கொண்டே இருக்கும். 

இந்த பங்கில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஷிப்ட் முடிந்ததும், தங்கள் கையில் இருக்கும் பெட்ரோல் போட்ட பணத்தை எண்ணி அங்குள்ள கலெக்சன் பெட்டியில் வைத்துவிட்டு கணக்குக் கொடுப்பார்கள்.

இந்த நிலையில் இந்த கலெக்சன் பெட்டியில் இருந்த ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் திடீரென மாயமாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் உடனே சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவி கேமராவில் பெட்ரோல் போடுவது போல் டூவீலரில் வந்த வாலிபர் ஒருவர், பங்க் கூட்டமாக இருக்கும் நேரத்தில் பெட்டியில் இருந்து பணத்தைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty thousand money missing in petrol bunk police investigation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->