#ஈரோடு || பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலிருந்து கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துடன் நடுப்பாளையத்தில் இருந்து ஈரோடு பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு நகர பேருந்து சோலார் புதூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஈரோடு அக்ரகாரம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தல பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Bus accident 18 people injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->