திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்! விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஈரோடு, பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

நேற்று இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் உடல்நல குறைவு காரணமாக கல்லூரியில் உள்ள அவசர ஊர்தி மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

சிகிச்சை முடிந்து மீண்டும் மாணவர் அவசர ஊர்தியில் ஏற முயன்ற போது திடீரென அவசர ஊர்தியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி விட்டார். 

பின்னர் சிறிது நேரத்தில் அவசர ஊர்தி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 20 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். 

இருப்பினும் அவசர ஊர்தியில் இருந்த இருக்கைகள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியது. முன்னதாகவே அவசர ஊர்தியில் இருந்து கரும்புகள் வருவதை சுதாரித்துக் கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode ambulance catches fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->