கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி! சக மாணவி மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் (வயது 20) இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவரது கல்லூரியில் நேற்று சுதந்திர தின தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 

அதில் இந்த மாணவி அவருடன் படிக்கும் சக நண்பருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அவரது நண்பர் பேசாமல் போனதாக தெரிகிறது. 

இதனைப் பார்த்த சக தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேல் ஏறி நின்று அங்கிருந்து குதித்துள்ளார். 

இதில் அவரது கால் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனைப் பார்த்த சக மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் இது தொடர்பாக மாணவியின் தாய் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவி 'ராகிங்' கொடுமை காரணமாக மாடியில் இருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாணவியை ராகிங் செய்த சக மாணவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

கல்லூரியில் மனைவி ஒருவர் ராகிங் கொடுமையால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student suicide attempt


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->