கோவை 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை.! உச்சகட்ட அதிர்ச்சியில் கிராம மக்களின் சோகத்தல் முடக்கம்.!!
Coimbatore girl rapped and killed her native village peoples shocked deeply
கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள துடியலூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அந்த வகையில்., பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அழைத்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில்., அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து., விஜயகுமார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவலானது ஏற்கனவே வெளியாகியிருந்தது.
பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு., பல முறை பாலியல் துன்புறுத்தலால் அவதியுற்ற பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலானது வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் உட்பட சுமார் 6 நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பிரேதம் கண்டறியப்பட்டு சுமார் ஒரு வார காலம் ஆகும் நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
சிறுமியின் சொந்த கிராமமான துடியலூர் கிராமத்தில் பெரும் சோகம் அங்குள்ள மக்களை ஆட்கொண்டுள்ளது. சிறு குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே கடைக்கு கூட அனுப்ப முடியாத நிலையிலும்., குழந்தைகளை வெளியே அனுபவதற்கே பயமாக உள்ளது என்று அந்த கிராமத்தின் மக்கள் அச்சம் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விபரம் தெரிந்த நபர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டிய அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9498104407., 9443122744., 9498173353., 9498174226., 9498101198., 0422-2642990 விபரம் தெரிந்த நபர்கள் காவல் துறையினரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Coimbatore girl rapped and killed her native village peoples shocked deeply