சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
Chennai heavy rain today
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்ற 29ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.