தமிழக ஆளுநருக்காக மாணவர்களை மிரட்டும் அண்ணா பல்கலைக்கழகம் .!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா விவேகானந்தர் அரங்கில் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஆளுநர் பங்கேற்கும் இந்த விழாவில் பார்வையாளர்களாக மாணவர்கள் பங்கேற்கவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம்  உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க நிர்பந்திக்கும் வகையில் விழா நடைபெறும் அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் ரவி கலந்துகொள்ளும் விழா அரங்கிற்கு உள்ளே சென்று விழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு வழங்கும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai Anna University forcing students for governor ravi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->