காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. நெல்லையில் பதற்றம்.!!
Thirunelveli Congress leader jayakumar death find out
இரு நாட்களுக்கு முன்பு மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இணைந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உவரி அருகே கரிச்சுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாம் தேதி முதல் ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அவரின் எரிந்த சடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு "மரண வாக்குமூலம்" என்ற தலைப்பில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டது விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
English Summary
Thirunelveli Congress leader jayakumar death find out