#சென்னை || 3 தனியார் நிறுவனங்களில் சி.பி.ஐ ரெய்டு!! வெளியான திடுக்கிடும் தகவல்!! - Seithipunal
Seithipunal


பல கோடி ரூபாய் மோசடி புகாரில் 3 நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!!

சென்னையில் வளசரவாக்கம், தண்டலம் மற்றும் டிபன்ஸ் காலனி உள்ளிட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிறுனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மூன்று நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்று இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனங்கள் எந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்டன, எவ்வளவு கோடி ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது, இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை தொடங்கியுள்ள இந்த சோதனையானது இன்று மாலை வரை நீடிக்கும் என தெரியவருகிறது. சிபிஐ அதிகாரிகளின் சோதனை முடிவில் முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது சிபிஐயும் பணம் மோசடி குறித்தான விசாரணையில் களமிறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI raid on 3 private companies in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->