சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு சுமார் 11.45 மணி அளவில், சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற பறக்கும் ரயிலில் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில், பெண்கள் பயணிக்கும் பெட்டியில் ஆண் நபர் ஒருவர் ஏறி உள்ளார். அந்த ரெயில் பெட்டியில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்துள்ளார். அந்த பெண்ணும் சிறிது தூரம் போனது கண்மூடி தூங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் தவறாக நடக்க மூன்றுள்ளார் அந்த நபர்.

விழித்து கொண்ட அந்த பெண் கூச்சல் இடவே, அந்த பெண்ணின் குரல் பக்கத்துக்கு பெட்டியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சிவாஜி என்பவருக்கு கேட்டுள்ளது. ஓடும் ரயில் என்பதால் உதவி செய்ய முடியாமல் காத்து இருந்து, அடுத்த ரயில் நிறுத்தத்தில் இறங்கி, பெண்கள் பெட்டியில் சென்று பார்த்த போது, பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடக்க முயற்சி செய்வதை பார்த்து, அந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பிடிப்பட்ட அந்த நபர் வேளச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் மீது வழக்குப்பதிந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட அந்த பெண் மீட்டு முதலுதவிக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஐஜி.பொன்மாணிக்கவேல் ஆறுதல் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brutality of a woman in Chennai train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->