காரை படுக்கையாக்கி விபசார தொழில்.! சென்னையில் சிக்கிய பெங்களூரு ஆசாமி..! - Seithipunal
Seithipunal


சென்னையில் காரை படுக்கையாக்கி விபச்சாரத் தொழில் நடத்திய பெங்களூரு ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் காரை படுக்கையாக மாற்றி விபச்சாரத் தொழில் செய்வதாக விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது மடிப்பாக்கம் சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்பொழுது காரின் அருகே ஒரு நபரும், காரில் அழகிய இளம் பெண் ஒருவரும் இருந்துள்ளார். மேலும் அந்தக் கார் உல்லாச படுக்கையாக மாற்றப்பட்டு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் காரின் அருகே நின்றிருந்தவர் விபச்சார தரகர் பெங்களூருவை சேர்ந்த சால்மன்(42) என்பதும், அவர் வெளி மாநில அழகிகளை அழைத்துச் சென்று வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்தில் காரை படுக்கையாக்கி விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 10 செல்போன்கள் மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்தும் ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சால்மனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore person arrested for prostitution business by the car in chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->