தன் சொந்த தொகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம்! சொல்ல முடியாத சோகத்தில் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, 

"சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், கல்வடங்கம் பகுதி காவிரி ஆற்றில், எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களும், மேட்டூர் அரசு கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்களும் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மணிகண்டன், பாண்டியராஜன், முத்துசாமி மற்றும் மணிகண்டன் ஆகிய 4 மாணவர்கள் நீருக்குள் மூழ்கி அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மாணவச் செல்வங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அன்பு மாணவச் செல்வங்களை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர்களுக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK GS Mourning Edappadi college student accident death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->