ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. நடிகர்களை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


சென்னை ரெயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.அப்படிப்பட்ட ஒரு கொடுமை தான் தற்போது அரங்கேறி உள்ளது.

அந்த வகையில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 23) என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சத்யா (வயது 20) என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

 இந்த நிலையில் நேற்று இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்யாவை, சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பிறகு தப்பியோடிய இளைஞர் சதீஷை  தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓடும் ரயில் முன்பு மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து டார்ச்சர் பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி.. வயிறெரியுது.' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kasthuri tweet about college student killed railway station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->