போலீஸ் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற இளைஞர்கள்!. அதிர்ச்சி சம்பவம்!.
காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞன் கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் செல்லவேல். இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரது மகளை அதே ஊரை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
ராம்குமார் மீது பல அடிதடி வழக்குகள் இருந்து வந்ததால், வெறுப்படைந்த அந்த பெண் ராம்குமாரை காதலிப்பதை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் தன் நண்பர்கள் சில பேருடன் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் செல்லவேல் வீட்டுக்குச் சென்று அவரது மகளை தேடினர்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய அந்த கும்பல், அங்கு வந்தவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் வீட்டில் நடந்த அந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
A young man who went to his home to kill a young woman who refused to love