போலீசில் புகார் கொடுத்தும் பயன் இல்லை. கொடூரனின் பாலியல் தொல்லையால் பெண் எடுத்த விபரீத முடிவு…! கொடைக்கானலில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு…! - Seithipunal
Seithipunal


 

கொடைக்கானல் எம்.எம். தெருவைச் சேர்ந்தவர் சாஜ். இவரது மனைவியின் பெயர் ரோகிணி (வயது 38). இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளன.

இவர் கேரள மாநிலம் கண்ணுார் பகுதியைச் சேர்ந்தவர். கொடைக்கானலில் இவர் வசித்து வந்த பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர், ரோகிணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பொறுத்துப் பார்த்த ரோகிணி, இது குறித்து, சில மாதங்களுக்கு முன்பாக கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும், இரு தரப்பினரையும், கூப்பிட்டு விசாரித்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், ஜெயசீலனின் பாலியல் தொந்தரவு மீண்டும் அதிகரித்துள்ளது. இவனைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இவன் செய்யும் பாலியல் தொந்தரவிற்கு என்ன தீர்வு? என்று யோசித்தார், அந்தப் பெண்.

பின், தன் வீட்டில், சேலையால் துாக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பாக, தன் சாவிற்கு, ஜெயசீலன் தான் காரணம் என்றும், தனது குழந்தைகளின் படிப்பு கெட்டு விட்டது. இறந்த பின்பு தன் கணவர் தான், உடலுக்கு எரியூட்ட வேண்டும், என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தினைக் காட்டி, சாஜ் கொடைக்கானல் காவல் நிலையத்தில், ஜெயசீலன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார். போலீசார் ரோகிணியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். ரோகிணி புகார் கொடுத்த அன்றே, அவன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது, என்று நுாற்றுக்கும் அதிகமானோர், ரோகிணியின் பிணத்தை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர்.

பின், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்ன பிறகு தான், பிணத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a lady taken un expected decision


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->