காதலுக்கு எதிர்ப்பு: கிணற்றில் குதித்து அக்கா-தங்கை தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் தாய் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கா-தங்கை கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அயன்புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா(21), காயத்ரி(20) ஆகிய இரண்டு பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் தங்கி, தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அயன்புதுப்பட்டி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்த வித்யாவும், காயத்ரியும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி இது குறித்து அவர்களிடம் விசாரித்துள்ளார். இதில் காயத்ரியும், வித்தியாவும் காங்கேயத்தை சேர்ந்த இரண்டு வாலிபரைகளை காதலிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அகிலாண்டேஸ்வரி மகள்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இந்நிலையில் வித்தியாவும், காயத்ரியும் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கிணற்றின் கரையில் இரண்டு செல்போன் கிடப்பதை பார்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றுக்குள் பார்த்தபோது ஒரு பெண் பிணமாக மிதந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிகுந்த ஒரு பெண்ணின் உடலையும், கிணற்றுக்கு அடியில் கிடந்த மற்றொரு பெண்ணின் உடலையும் கைப்பற்றினர். 

மேலும் இவர்கள் இரண்டு பேரும் அக்கா, தங்கைகளான வித்யா, காயத்ரி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அவர்களின் செல்போன்களை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Sisters committed suicide by jumping into a well in Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->