#BREAKING || பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அதிரடி கைது.. தட்டி தூக்கிய சைபர் கிரைம்.!!
Political critic savukku Shankar arrested
பிரபல யூட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே சவுக்கு சங்கர் நடத்தி வரும் சவுத் மீடியா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சட்டக் கல்லூரி மாணவர் கார்த்திக் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு நேற்று நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த வேல்முருகன் என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது தகராறில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதேபோன்று சவுக்கு மீடியாவில் பணியாற்றி வந்த லியோ என்ற நபரை போலீசார் தேடி வருவதாகவும், அதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பின் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
English Summary
Political critic savukku Shankar arrested