இந்த வயதில் அந்த சாதனையை படைப்பாரா கிறிஸ் கெய்ல்?? உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு! - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து ஆட்டத்தை துவங்கிய  மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் குவித்தது. ஹெட்மையர் 104 ரன்களும் , கிறிஸ் கெய்ல் 50 ரன்களும் எடுத்தனர்.


இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 263 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும், மோர்கன் 70 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் அடித்த அரைசதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 9912 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 88 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்கள் குவித்த 2வது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை கெய்ல் படைப்பார். இதற்கு முன்னர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணியில் 10000 ரன்களை கடந்துள்ளார்.

இந்த தொடருடன் கெய்ல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அவர் 10000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chris gayle new record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->