பிரபல கிரிக்கெட் வீரரின் அதிரடி அறிவிப்பு.! இங்கிலாந்தை தெறிக்க விட போறேன்.!!
பிரபல கிரிக்கெட் வீரரின் அதிரடி அறிவிப்பு.! இங்கிலாந்தை தெறிக்க விட போறேன்.!!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.
இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பிடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவரும் அஷ்வின், தனது திறமையை மீண்டும் நிரூபித்து மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் உள்ளார்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறப்பான இடம். இங்கு சூழலை புரிந்துகொண்டு பந்து வீசுவது தான் முக்கியம். நீண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து உத்வேகத்தை காட்டுவது அவசியம். அப்போது தான் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசுவேன் என அஷ்வின் கூறியுள்ளார்.
English Summary
aswin talk about england test series