பக்தர்களின் கோஷத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை தேரோட்டம்.!
madhurai meenatchi amman temple chithirai chariat
உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பத்து நாள் தியொருவிழாவில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த சித்திரை திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிலையில், இந்த சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
காலை ஆறு மணி அளவில் தொடங்கி நடைபெற்று வரும் தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது.
இதைத் தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
madhurai meenatchi amman temple chithirai chariat