பள்ளி மாணவன் மீது கொண்ட கடும் காதலால், இளம்பெண் செய்த விபரீதம்!
இளம்பெண் தன் காதலுக்காக மாணவனையே கடத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பள்ளி மாணவன் மீது அளவுகடந்த காதல் கொண்டதால் அந்த மாணவனையே கடத்திய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரியில் விவசாயியான தசரதன் என்பவரின் 15 வயது மகன் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும், அவரது உறவினர் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தசரதன் அவர்களை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் 15 வயது மாணவன் திடீரென காணாமல் போயுள்ளான். இதுகுறித்து தந்தை தசரதன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தேடியபோது தசரதனின் மகனை பெங்களூருக்கு
அந்த இளம்பெண் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் தமருபுரி அழைத்துவரப்பட்டனர்.
மாணவனை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இளம்பெண் செய்த அச்செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
young girl love on school student. she kidnapped her