சந்தேகம் வந்தால்..! கணவன் மிருகம் ஆவான்.. மனைவி பலியாவாள்..!! மகன் அனாதையாவான்..!! ராம்நாட்டில் நடந்த கொடூரம்..!!
சந்தேகம் வந்தால்..! கணவன் மிருகம் ஆவான்.. மனைவி பலியாவாள்..!! மகன் அனாதையாவான்..!! ராம்நாட்டில் நடந்த கொடூரம்..!!
சந்தேகம் என்பது ஆறாத, ஒரு புற்று நோய். இது வளர்ந்த கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது சந்தோசத்தை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப் படுவது, குடும்பம் தான்.
எத்தனை எடுத்துச் சொன்னாலும், பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பின் உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ் நாள் முழுதும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்துக் கொண்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் சென்று விற்பனை செய்து வருகிறார்.
ராமகிருஷ்ணன், தனது மனைவி மாலா (வயது 40) வை சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பாராம். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். மாலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டதனால், மாலாவிற்கும், அவரது கணவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்ட்டிருக்கிறது.
நேற்று மாலை, சைக்கிளில் சென்று வியாபாரம் செய்து விட்டு வந்த ராமகிருஷ்ணன், வழக்கம் போல, மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி இருக்கிறது.
ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியை சராமரியாக வெட்டினார். இதனால், ரத்த வெள்ளத்தில் துடி துடித்த மாலா, அந்த இடத்திலேயே பலியானார்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து நயினார் கோயில் போலீசார், ராமகிருஷ்ணனைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இவர்களின் மகன் தற்போது, ஆதரவின்றி அனாதையாக இருக்கிறான்.
English Summary
HUSBAND KILLED HIS WIFE IN RAMANATHAPURAM