10-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை!! விபரம் அறிந்து தாயார் எடுத்த அதிரடி முடிவு!!
baby born for 10th student
மதுரை சேடப்பட்டி அருகே சின்னகட்டளையைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பெரும்பாலான நேரங்களில் அம்மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட அவர் மட்டும் வீட்டில் தனித்து இருப்பார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நலத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரது தாயார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் பரிசோதனையில் மாணவி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை விசாரிக்கவே அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.
இந்நிலையில் கடந்த 10-ந்தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாணவி மைனர் என்பதால் சிறுமிகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.
English Summary
baby born for 10th student