தகாத உறவால் தொடரும் அவலங்கள்.,4வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை .,பரிதவித்து நிற்கும் குழந்தை .!
தகாத உறவால் தொடரும் அவலங்கள்.,4வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை .,பரிதவித்து நிற்கும் குழந்தை .!
ஆஸ்திரேலியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்ற பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.
இவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆப்ரஹாம் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.மேலும் திடீர் மாரடைப்பில் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக சோபியா, கேரளாவுக்கு சென்று இறுதிசடங்குகளை செய்தார்.
இந்நிலையில் உடல் பிரேத பரிசோதனையில் இறந்த ஆப்ரஹாமின் ரத்தம் மற்றும் கல்லீரலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆப்ரஹாம் மனைவி சோபியாவும், அருண் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சோபியாவிற்கு திருமணத்துக்கு முன்னரே அருணுடன் காதல் இருந்ததாகவும் திருமணத்துக்கு பின்னரும் அந்த உறவை அவர்கள் தொடர்ந்துள்ளார்கள் எனவும் தெரியவந்தது .
மேலும் இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆப்ரஹாமை ஜுஸில் சயனைடு விஷம்கலந்து திட்டமிட்டு கொன்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சோபியாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்ரஹாமின் 4 வயது மகன், சோபியாவின் சகோதரியின் பராமரிப்பிலும் விடப்பட்டுள்ளார்.
English Summary
4 year boy mother get 22 years jail punishment