2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் டி.டி.வி.! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், அ.மு.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். 

அதன்படி வருகின்ற 1 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளிலும் 2 ஆம் தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும் 3 ஆம் தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதனை தொடர்ந்து 4 ஆம் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் 6 ஆம்  தேதி கோயம்புத்தூர், 7 ஆம் தேதி வேலூர், 8 ஆம் தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->