அம்மா வெற்றிபெற பம்பரமாய் சுழலும் சவுமியா அன்புமணி மகள்கள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சவுமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மலைவாழ் கிராமங்களுக்கு சென்ற சவுமியா அன்புமணி மகள் மலைவாழ் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மலைவாழ்மக்களிடம் பேசிய சௌமியா அன்புமணி இளைய மகள், பத்தாண்டுகளுக்கு முன் என் தந்தை இதே தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தருமபுரிக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். இப்பொது எனது அம்மா தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்காக வாக்கு சேகரிக்க நான் வந்துள்ளேன் உங்கள் பிரச்சினைகளை என் அம்மாவிடம் நான் கண்டிப்பாக கூறுவேன் . எங்கள் அம்மா வெற்றி பெற்ற பிறகு உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று பேசி மலைவாழ் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tribal people meet with sowmiya Anbumani daughter


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->