குத்தாட்டம் போடும் வைகோ, திருமா.!! கொண்டாட்டத்தில் தோழமை கட்சிகள்.!! 1 மணி கலவரம் ஓய்ந்து போனது.!!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையில், அதிமுக, பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது. இதில் தேமுதிக உடன் இழுபறி நிலை இருந்து வருகிறது.

இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும், தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து சுமுகமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வர மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு, நண்பகல் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் வந்துள்ள வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதேபோல், விடுதலை சிறுத்தைகளும் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை கேட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளன.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்திக்க சென்றதும், அதிமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்த முக ஸ்டாலின் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் பரவவே, பதறிப்போன தோழமை கட்சிகள் அய்யோ.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் இந்த முறையும் நமக்கு ஒத்த சீட்டு தான் போல என்று வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு நின்றனர். 

ஒருவேளை திமுக கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தோழமை கட்சிகளின் கனவு சுக்கு நூறுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் போக மீதம் உள்ள 30 தொகுதிகளில் திமுக 18-20, தேமுதிக 6-8 என்று போனால் மீதம் உள்ள தொகுதிகளில் தோழமை கட்சிகளுக்கு தலா 1 தொகுதி தான் கிடைக்கும். 

ஆகா, ஸ்டாலின் என்ன பேச போகிறார் என்று தவிப்பில் இருந்த தோழமை கட்சிகளுக்கு வயிற்றில் பாலை வார்த்தார் முக ஸ்டாலின்.. விஜயகாந்த சந்தித்தபின் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், ''உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்களை நலம் விசாரிக்கவே வந்தேன். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தலைவர் கருணாநிதி இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத விஜயகாந்த் அவர்கள் கண்ணீர் மல்க அவரது நினைவிடத்தில், உடல்நிலை சரியில்லாத அந்த நேரத்திலும் அஞ்சலி செலுத்தியது நம் கண்முன் இன்று வரை உள்ளது. 

அந்த வகையில் அவர் உடல்நிலை சரியில்லாத போது நான் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளேன்'' என்று தலைவர் ஸ்டாலின் தெரிவித்த அடுத்த நொடியே தப்பித்தது தலை.. ஆளுக்கு ரெண்டு தொகுதி உறுதி என்று குத்தாட்டம் போடும் அளவிற்கு வைகோ, திருமா மனநிலை இருந்திருக்கும். ஒரு மணி நேரத்தில் வாணவேடிக்கை விட்ட தமிழக அரசியலை. புஷ்வாணம் கொளுத்தி வைத்து, பரபரப்புக்கு முடிவு கட்டினார் முக ஸ்டாலின். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUMA VAIKO HAPPY ABOUT MK STALIN PRESS MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->