எங்களின் சின்னத்தை பார்த்தே அதிமுகவினர் பதறுகின்றனர் - அடிச்சுதூக்கு அதிரடியில் தங்க தமிழ்செல்வன்.!!
thanga tamilselvan speech about thiruvarur election and admk party
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது.,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில்., ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அங்குதான் இருந்தனர். அந்த சமயத்தில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.அவரது மறைவிற்கு பின்னர் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைத்து., அந்த விசாரணையும் நிறைவு பெறாமல் உள்ளது.
திருவாரூரில் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் என்று எண்ணி வெற்றிக்கான வேட்பாளரை அறிவித்து., பிரச்சாரத்தை தொடங்கிய நேரத்தில்., தோல்வி பயத்தில் அதிமுகவும்., திமுகவும் கஜா புயலை காரணம் காட்டி நிறுத்திவிட்டனர். நமது வெற்றி திருவாரூரில் உறுதி செய்யப்பட்ட நிலையில்., தேர்தல் திடீரென இரத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையத்திடம் குக்கர் சின்னம் கேட்டு மனு அளித்த நிலையில்., தேர்தல் ஆணையமானது குக்கர் சின்னத்தை வழங்க மறுத்தது. இரட்டை இலை சின்னத்தை வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குக்கர் சின்னத்தை பார்த்து பயந்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நிலையான சின்னத்தை பெறுவோம் என்று பேசினார்.
English Summary
thanga tamilselvan speech about thiruvarur election and admk party