தமிழக அரசியல் பிரபலத்தை சீண்டியதால் வந்த வினை..? கேரளத்தில் நடந்த திடீர் மாற்றம் - நடுநடுங்கும் உயரதிகாரிகள்.!
சபரிமலை கோயிலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் இருமுடி கட்டி சென்றார்.
சபரிமலை சென்ற மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா திருச்சூர் நகரகாவல் ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை கோயிலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் இருமுடி கட்டி சென்றார்.
நிலைக்கல்லிலிருந்து அவரது வாகனத்தை பம்பை செல்ல அனுமதித்த காவல்துறையினர், அவருடன் சென்ற அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சக பக்தர்களோடு பேருந்தில் சென்றார் அமைச்சர். கேரள காவல்துறையினர் மத்திய இணை அமைச்சரை அவமதித்துவிட்டதாக குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா திருச்சூர் நகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
police take action against bjp minister