பாமக வேட்பாளர் திலகபாமா திடீர் போராட்டம்.. பரபரப்பில் திண்டுக்கல்.!!
Pmk candidate thilagabama Demonstration
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. அதனால் அனைத்து கட்சி தலைவகளும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகக்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக பொருளாளர் திலகபாமா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான என்று திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திண்டுக்கல் கடை வீதி பகுதியில் டாஸ்மார்க் கடையின் முன்பு திருட்டுத்தனமாக மது விற்பனையாகிக் கொண்டு இருந்தது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொகுதியில் மது ஒழிப்பிற்கு எதிரான வாக்குறுதிகளை பிரச்சாரங்களை முன்னிறுத்தி வரும் திலகபாமாவிற்கு இச்செயல் ஆத்திரமூட்டியது. உடனடியாக அந்த மதுபானக் கடை முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Pmk candidate thilagabama Demonstration