வெற்றி பெற்றதும்...  அனைத்தும் நிறைவேற்றப்படும் - ப.சிதம்பரம் பேட்டி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரிமான ப. சிதம்பரம் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதே சமயத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க வலியுறுத்துகிறது. 

ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி அமைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரிகள் மாற்றம் செய்வதற்கு பதிலாக பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகளை குறைக்கலாம். 

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மையமாக கொண்டு எங்களது பிரசாரம் அமைந்துள்ளது. 

ஒத்த கருத்துடைய காட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. எனவே தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p Chidambaram speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->