இருக்கும் பிரச்சினைல இது தேவையா.? பணம் கொடுத்து சிக்கிய ஓ.பி.எஸ்.!!
OPS gave money to person who take selfie with him
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று முன்பணம் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அவ்வாறு இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் விதியை மீறி தன்னுடன் செல்பி எடுத்துக் கொண்ட நபருக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர ஓ.பன்னீர் செல்வத்துடன் நான்கு பேர் அதே பெயரில் வீட்டுமனை தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பணம் கொடுத்திருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
OPS gave money to person who take selfie with him