அதிரடியில் இறங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் : அதிமுகவில் இருந்து மீண்டும் கூண்டோடு தூக்கப்பட்ட 3 மாவட்ட நிர்வாகிகள்!
அதிமுகவில் இருந்து மீண்டும் கூண்டோடு தூக்கப்பட்ட 3 மாவட்ட நிர்வாகிகள்!
ஈரோடு, திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைகொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.கவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் ஈரோடு, திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நீக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ops eps announced that the ADMK executives will be removed.