தீர்மானம் தோல்வி.. திமுக நகர மன்றம் தப்பியது.!! செங்கோட்டை நகராட்சியின் கூத்து.!! - Seithipunal
Seithipunal


மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவியாக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை நடைபெற்ற திமுக நகர்மன்ற தலைவி ராஜலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். ராஜலட்சுமிக்கு எதிராக திமுக அதிமுக பாஜக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களின் 13 பேர் மட்டுமே பங்கேற்றனர். 

போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No confidence against senkottai DMK City president failed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->