ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து பேசிக்கொண்ட கனிமொழி, கடம்பூர் ராஜு! - Seithipunal
Seithipunal



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கி. ராவின் நினைவாக மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் நடந்தன. 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பேதமின்றி கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜியவன் மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் பேசிய கனிமொழி, "கட்சி வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை வெகுவாக பாராட்டினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், கி.ரா.வின் நிகழ்வில் பங்கேற்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, 'தமிழர் பண்பாட்டினை காக்க பாடுபட்ட கி.ரா.வின் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

இந்த மண்ணின் மைந்தன் என்ற வகையில் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். கி.ராவிற்கான மணிமண்டபம் அறிவித்து, தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kee raa kanimozhi kadampur raju


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->