ஜெயலலிதா பயன்படுத்திய ஒன்று.! விரைவில் விற்பனைக்கு வருகிறது.!
ஜெயலலிதா பயன்படுத்திய ஒன்று.! விரைவில் விற்பனைக்கு வருகிறது.!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயணத்துக்காக கடந்த 2006-ம் ஆண்டு நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. “பெல் 412 இ.பி.” என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் உடையது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் பல தடவை அந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி இருக்கிறார். அவர் மரணத்துக்கு பிறகும் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. கடைசியாக அந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் வரை பயன்பாட்டில் இருந்தது. பிறகு பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது, சென்னை விமான நிலையத்தில் அந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் விற்பனை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. ஹெலிகாப்டரை விற்பதற்கு தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சென்னை விமான நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Jayalalithaa used helicopter sale coming soon