இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் கண்டிக்கதக்கது!! எச்.ராஜா கண்டனம்!!  - Seithipunal
Seithipunal


அதிகப்படியான எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது என்ற தீவிரவாதி,ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது  மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். இந்திய ராணுவத்தின் பல வாகனங்கள் சேதமடைந்தன. 

இதனையடுத்து, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகப்படியானோர் குவிக்கப்பட்டனர். மேலும், தாக்குதல் நடந்த இடம் பாதுகாப்பு படைவீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

பின்னர், 40 வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு பற்றிய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் இன்று காலை துவங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, " நேற்று பாகிஸ்தான் அரசால் ஆதரித்து பாதுகாக்கப்படும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஜெய்ஸி முகமது அமைப்பு சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ஜவான்கள் படுகொலை செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்" என தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hraja says about kashmir attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->