ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல்.!!
Eps condolences to MDMK mp ganesamoorthy death
ஈரோடு மக்களவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் மதிமுகவின் மூத்த நிர்வாகிகளமான கணேசமூர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்திகள் "ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான திரு கணேசன் மூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு துயரமுற்றேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மறைந்த திரு கணேசன் மூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Eps condolences to MDMK mp ganesamoorthy death