உன் பிள்ளைக்கெல்லாம் சீட்டா?! திமுகவின் முக்கிய புள்ளி எடுத்த முடிவு.!! ஆடிப்போன ஸ்டாலின் துரைமுருகன்.!!
DMK VELLORE VIP JOINED PMK
திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் என்ற தகவல் கடந்த இரண்டு மாதங்களாகவே தகவல் வெளியாகிய நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.
காலம் காலமாக கட்சிக்கு கொடி தூக்கிய நாங்கள் இருக்கும் போது, வாரிசுக்கு சீட்டா என்று அம்மாவட்ட திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர். இது குறித்து தலைமைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனை சட்டை செய்யாத ஸ்டாலின், இதுகுறித்து வரும் புகார்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதனால், அதிர்ச்சியான திமுகவின் முன்னாள் மாவட்ட பொருளாளரும், முன்னாள் மாவட்ட துணை , குடியாத்தம் ஒன்றிய சேர்மனும், முன்னாள் சட்டமன்ற வேட்பாளருமான சீவூர் எஸ். துரைசாமி அவர்கள் இன்று பாமகவில் இணைந்துள்ளார்.
இதனால், வேலூர் மாவட்டத்தில் திமுகவின் பலம் குறைந்துள்ளதாக, திமுக நிர்வாகிகளே புலம்ப ஆரம்பித்து உள்ளனராம். வன்னியர் மக்கள் அதிகம் உள்ள வேலூர் தொகுதியில் பாமகவுக்கு என்று தனி வாக்கு வங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி களமிறங்க உள்ளதால் இந்த முறையும், வேலூர் அதிமுகவிற்கே என்று அடித்து கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
English Summary
DMK VELLORE VIP JOINED PMK