திமுக-காங்கிரஸ் இடையே மார்ச்-10ல் மீண்டும் பேச்சுவார்த்தை.!!
DMK Congress Seat sharing discussion again on March10
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக 8 தொகுதிகளை தர முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 11 தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்த சூழலில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 அல்லது 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விரைவில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMK Congress Seat sharing discussion again on March10