JUST IN || ஓபிஎஸ், நவாஸ் கனி மீது வழக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையினான தேசிய ஜனநாயக கூட்டணியில ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பரப்புரையின் போது ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், தாக்களின் போது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்ததாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் நவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against ops and Navas kani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->