#புதுக்கோட்டை || ஆரத்தி வைத்த ஆப்பு... ஓ.பி.எஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!
Aranthangi police case filed against Ops
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்கள் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.
இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க ஓ.பன்னீர்செல்வம் வேட்பமான தாக்கல் செய்யும்போது விதிகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.1,000 கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்த்திக்கு பணம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் கூட்டியது உள்ளிட்ட புகாரின் பேரில் ஓபிஎஸ் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Aranthangi police case filed against Ops