ரவுடி போல மிரட்டிய திமுக எம்எல்ஏ - நறுக்குகென்று நாலு வார்த்தை கேட்ட அண்ணாமலை!
Annamalai Condemn to Thambaram DMK MLA
தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா, மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவன தொழிலதிபரை, "காலை உடைத்து விடுவேன். கம்பெனியை இழுத்து மூடி விடுவேன்" என்று மிரட்ட, அதற்கு அந்த தொழிலதிபர், "உன் சொந்த கட்சி காரனை மதிக்கத் தெரியாத உன்னைப் பற்றி மேல் இடத்தில் புகார் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக எம்.எல்.ஏ : நீ யார் என்று தெரிந்து தான் இங்கு வந்துள்ளேன். நீ சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவன் என்று தெரிந்துதான் உள்ளே வந்திருக்கிறேன்.
தொழிலதிபர் : நீங்கள் உங்கள் கட்சிக்காரனாகியே எனக்கே மரியாதையை கொடுக்கவில்லை. உங்களுக்கு நான் ஓட்டு போட்டு உள்ளேன். எனக்கு மரியாதை தரவில்லை. நான் நீதிமன்றம் செல்கிறேன். தலைமைச் செயலகம் செல்கிறேன்.
இந்த காணொளியை அப்படியே முதல்வர் ஸ்டாலினிடம் காட்டுவேன் என்று தெரிவிக்க, அதற்க்கு திமுக எம்எல்ஏ மீண்டும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது? திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையா அல்லது திமுக ஆட்சியால் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Annamalai Condemn to Thambaram DMK MLA