" கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி " - பாரிவேந்தர்.!!
Alliance Party and voters thank you by parivendhar
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. முதற்கட்டமாக இந்தியாவிலுள்ள 102 நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றதிற்கும் ஒரே கட்டமாக நடைபெறுவதால், 39 தொகுதிகளில் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவாகின. தமிழ்நாட்டில் இந்தமுறை அதிமுக, திமுக, பாஜக, நாதக என் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
நேற்று மாலையுடன் தேர்தல் முடித்தநிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி. தேர்தல் முடித்தை அடுத்து அக்கட்சியின் தலைவர் பரிவேந்தர் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தள பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம். எனக்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்த பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
English Summary
Alliance Party and voters thank you by parivendhar