தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது - விஜயபாஸ்கர்.!
ADMK vijayabhaskar speech about thirumavalavan
புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாரத்தை ஒழிக்க தவறிய மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஏற்கனவே தமிழகம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டை இருந்த நிலையில் தற்போது திருமாவளவன் பேசியிருப்பது பாராட்டுதலுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுகவினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு என அவர் கூறியுள்ளார்
English Summary
ADMK vijayabhaskar speech about thirumavalavan