மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது!
AAP MP Sanjay Singh arrested in liquor policy case
டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு இந்த ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கின் அடிப்படையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே கட்சியை சேர்ந்த மேலூர் ஒரு எம்பி கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
AAP MP Sanjay Singh arrested in liquor policy case