ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?  - Seithipunal
Seithipunal


பொதுவாக ஜலதோஷம், இரும்பல், சளி, தலைவலி, உடல் அசதி போன்றவற்றை குணப்படுத்த ஆவி பிடிப்பது வழக்கம். ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகளும் விரைவில் வெளியேறும் என்பது சிலருக்கும் தெரியாத உண்மை. 

* கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் விரைவில் நீங்க 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடிப்பது நல்லது. மேலும் கரும்புள்ளிகள், முகத்தில் உள்ள அழுகுகள் விரைவில் வருவதோடு மட்டுமல்லாமல் கரும்புள்ளிகள் ஏற்படாமலும் பாதுகாக்கும். 

* ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள பருக்கள் குறையும். ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் இயற்கையாகவே சுரந்து சருமம் பொலிவாக இருக்கும். 

* இதன் மூலம் முகத்தில் சேரும் அழுக்குகளை துணியால் துடைத்தாலே போய்விடும். ஆவி பிடிப்பது முதுமை தோற்றத்தை தடுக்கும். முகம் மிகவும் பளிச்சென்று மாறும். 

* முகப்பருக்கள் இருக்கும் பொழுது 4 முதல் 5 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். பிறகு ஐஸ் கட்டினால் முகத்தை தேய்த்து கழுவினால் ஒரே நாளில் முகப்பருக்களை குறைத்து விடலாம். 

* ஆவி பிடிப்பதால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தோள்களில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆவி பிடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

steam applying face benefits in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->