நிலச்சரிவால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறாங்கல்..! இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவால் பெரிய பாறாங்கல் உருண்டு வீட்டின் மீது விழுந்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தகுரியா பகுதியில் இன்று அதிகாலை மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மலைப்பகுதியில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறாங்கல் ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதான அர்ஷாத் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இடிபாடுகளில் சிக்கிய இரண்டு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவினால் அர்ஷாத்தின் வீடு பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Killed as Massive Boulder Fall on His House in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->