டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜிநாமா! காரணம் இதுதானா? - Seithipunal
Seithipunal


டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்தார். அரவிந்த் சிங் தனது ராஜினாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸின் முடிவில் தனக்கு சிறிதும் விருப்பம் இல்லை என்பதால் காங்கிரஸிலிருந்து விலகுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது அஜய் மாக்கனுடன் அரவிந்த் சிங் லவ்லிக்கு முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 

பின்னர் சில மாதங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு அவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமதிய ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் மீண்டும் அவர் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Congress president suddenly resigns


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->