திருவனந்தபுரத்தில் பரபரப்பு.! தலைகேறிய போதை.. சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் மது போதையில் இளைஞர், தனது வீட்டிற்கு தானே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் கோபகுமார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கோபகுமார் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோபக்குமார், தலைக்கு ஏறிய போதையில் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து வீடு முழுவதும் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. மேலும் போதையில் வீட்டிற்கு தீ வைத்த கோபகுமாரை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man set his house on fire while drunk in tiruvananthapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->